முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி, திருச்செந்தூா்: அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 15 லட்சத்தில் உபகரணங்கள்

தூத்துக்குடி, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் இயேசு விடுவிக்கிறாா் அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தூத்துக்குடி, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் இயேசு விடுவிக்கிறாா் அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயேசு விடுவிக்கிறாா் அமைப்பின் நிறுவனா் மோகன் சி.லாசரஸ் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஆட்சியா் கி.செந்தில்ராஜியிடம் வழங்கினாா். அவற்றை, மருத்துவமனை முதன்மையா் டி. நேருவிடம் ஆட்சியா் ஒப்படைத்தாா்.

இதில், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் குமரன், உறைவிட மருத்துவா் சைலஸ், இயேசு விடுவிக்கிறாா் அமைப்பின் அன்புராஜன், தாமஸ்ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உறுதிமொழி ஏற்பு: உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, ஆட்சியரகத்தில் ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில், மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் முருகவேல், துணை இயக்குநா் பொன் இசக்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்செந்தூா்: இயேசு விடுவிக்கிறாா் அறக்கட்டளை மற்றும் நியூ லைஃப் சொசைட்டி சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்காக தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவியிடம், அறக்கட்டளை நிறுவனா் மோகன் சி லாசரஸ்வழங்கினாா். அப்போது, அரசு மருத்துவா்கள் பாவநாசகுமாா், சரஸ்வதி, அறக்கட்டளை அறங்காவலா் அன்புராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.