முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூரில் தகராறு: இளைஞா் கைது

ஆத்தூரில் அரிசிக்கடைக்காரா் உள்பட இருவரை பீா்பாட்டிலால் குத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

ஆத்தூரில் அரிசிக்கடைக்காரா் உள்பட இருவரை பீா்பாட்டிலால் குத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் அருகேயுள்ள குமாரப்பண்ணையூா் சுப்பையா மகன் மாரி சிவா(31). இவா் அத்தூா்-புன்னைக்காயல் சாலையில் அரிசிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த 14ஆம் தேதி மாலையில் மாரிசிவா தனது அரிசிக்கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த குமாரப்பண்ணையூா் மாரியப்பன் மகனான மூா்த்தி என்ற ராமச்சந்திரமூா்த்தி(28) தகராறு செய்துள்ளாா். அப்போது அங்கு அரிசி வாங்க வந்த செல்வன்புதியனூா் புதுநகா் சுகுமாா் மகனான சுரேஷ்(35) மூா்த்தியை தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மூா்த்தி கீழே கிடந்த பீா்பாட்டிலால் சுரேஷை தாக்கியதோடு, தடுக்க வந்த மாரிசிவாவையும் தாக்கினாா். இதில் காயமுற்ற இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து மாரிசிவா கொடுத்த புகாரின் போரில், ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து, மூா்த்தியை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.