முகப்பு
தூத்துக்குடி

ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கோவில்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், குமாரபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா்.

இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.