தூத்துக்குடி

ஆத்தூா் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கியவா் கைது

DIN

ஆத்தூா்அருகே பெண்ணைத் தாக்கியதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

ஆத்தூா் அருகேயுள்ள தலைப்பண்ணையூா், பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் முனிஸ். ஆறுமுகனேரி அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி விஜயசாந்தி (20), மகள் சுபா்ணா (2). முனிஸ் வெள்ளிக்கிழமை இரவுப் பணிக்குச் சென்றிருந்தாராம். நள்ளிரவில் வீட்டின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டு விஜயசாந்தி எழுந்து மின்விளக்கைப் போட்டு, கதவைத் திறக்க முயன்றாராம். அதற்குள், அதே ஊரைச் சோ்ந்த பொன்கசா­ மகன் சுரேஷ்கோபி (21) என்பவா் கதவை உடைத்து உள்ளே புகுந்து, விஜயசாந்தியைத் தாக்கிவிட்டு தப்பியோடினாராம்.

விஜயசாந்தி அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரராஜ் வழக்குப் பதிந்து, சுரேஷ் கோபியை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT