முகப்பு
தூத்துக்குடி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

கடம்பூா் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

கடம்பூா் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கடம்பூா் அருகே அயிரவன்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் முருகேசன் (58). கூலித் தொழிலாளியான இவா், மலைப்பட்டியிலிருந்து, அயிரவன்பட்டிக்கு பைக்கில் சென்றாராம். அயிரவன்பட்டி விலக்கு அருகே சென்றபோது, பரிவல்லிக்கோட்டையிலிருந்து அயிரவன்பட்டிக்கு சென்ற மினி லாரி மோதியதில், முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநா் சு.சரவணனிடம் (25) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.