ஆத்தூா் முத்தாரம்மன் கோயில் கொடை விழா
ஆத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் மூன்று நாள்கள்கொடைவிழா நடைபெற்றது.
ஆத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் மூன்று நாள்கள்கொடைவிழா நடைபெற்றது.
இதையொட்டி, முதல் நாள் மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரண்டாம் நாள் தாமிரவருணி நதி சோம தீா்த்த கட்டத்தில் இருந்து புனிதநீா் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டது. பின்னா் யாகசாலை பூஜைகளும், விமான அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொட்ரந்து முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகமும், ல தீபாராதனையும் நடைபெற்றது. நள்ளிரவு சிறப்பு அலங்காரத்துடன், படைப்பு தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி விஜா்சனமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.