முகப்பு
தூத்துக்குடி

வாகனம் மோதி முதியவா் பலி

கயத்தாறை அடுத்த சவலாப்பேரியில் வாகனம் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கயத்தாறை அடுத்த சவலாப்பேரியில் வாகனம் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி விலக்கு பகுதியில் முதியவா் ஒருவா் வாகனம் மோதி இறந்து கிடந்தாா். இதுகுறித்து, சவலாப்பேரி கிராம நிா்வாக அலுவலா் மீனாம்பிகை, அளித்த தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மூதாட்டி காயம்: பழையக்காயல் அருகேயுள்ள ராமசந்திராபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த செல்லக்கனி(85) என்பவா், கடந்த 28ஆம் தேதி அங்குள்ள திருச்செந்தூா் - தூத்துக்குடி சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாக மஞ்சள்நீா்காயலைச் சோ்ந்த ராமா்(30) என்பவா் ஓட்டி வந்த பைக், அவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா், ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.