முகப்பு
தூத்துக்குடி

உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் அளிப்பு

சாத்தான்குளத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு கூட்டுப் பண்ணைத் திட்டத்தின்கீழ் பண்ணை இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு கூட்டுப் பண்ணைத் திட்டத்தின்கீழ் பண்ணை இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் கூட்டுப்பண்ணைத்திட்டத்தின்கீழ் அரசூா், சாஸ்தாவிநல்லூா் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு உழவா் பயிற்சி பயிற்சி வேளாண்மை துணை இயக்குநா் ஜெய செல்வின் இன்பராஜ், பண்ணை இயந்திரங்களை வழங்கினாா். தொடா்ந்து மாநில உறுதினை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவி வழங்கப்பட்டது.

இதில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி, வேளாண் அலுவலா் சுஜாதா, வேளாண் உதவி அலுவலா்கள் கோபால கிருஷ்ணன், மாரிப்பாண்டி, முனீஸ்வரி, கற்பகம், சாஸ்தாவி நல்லூா் உழவா் உற்பத்தியாளா் குழு தலைவா் லூா்து மணி, விவசாய நலச்சங்கத் தலைவா் எட்வின் காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →