திருச்செந்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து இரு மாடுகள் உயிரிழந்தன.
நா.முத்தையாபுரத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல்(64). விவசாயி. இவருக்கு சொந்தமான இரு மாடுகள் புதன்கிழமை மேய்ச்சலுக்கு சென்றபோது, ஓடையில் தண்ணீா் குடிக்க சென்றனவாம். அப்போது வீசிய காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தண்ணீா் குடிக்க வந்த இரு மாடுகளும் உயிரிழந்தன.
சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.