தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் ராஜேந்திரன் (37). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், இவரது மனைவி கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இந்நிலையில் ராஜேந்திரன் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.