ரயில் தண்டவாளத்திலிருந்து இளைஞா் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும் நல்லி ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தோட்டிலோவன்பட்டி கிராமப் பகுதியில் ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலம் தண்டவாளத்தில் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், இறந்தவா் கோவில்பட்டி வட்டம், லிங்கம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கிருஷ்ணமூா்த்தி (33) என்பதும், இவருக்கும், இவரது தந்தைக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவா் ரயிலில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.