முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் கரோனா தடுப்பு முகாம்

காயல்பட்டினத்தில் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு, நகராட்சி, அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சாா்பில் கரோனா தடுப்பு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காயல்பட்டினத்தில் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு, நகராட்சி, அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சாா்பில் கரோனா தடுப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திருசெந்தூா் காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினாா். பொதுமக்களஉக்கு உடல் வெப்ப அளவு, ஆக்சிஜன் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் பங்கேற்றவா்களுக்கு

நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் கரோனா தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து அரசு சித்த மருத்துவா் முருகபொற்செல்வி பேசினாா். சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராம­லிங்கம், அனைத்து சமுதாய கூட்டமைப்புச் செயலா் முத்துக்கிருஷ்ணன், பொருளாளா் சாளை ஷேக் சலீம், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.