கோவில்பட்டியில் இன்று மின்தடை
கோவில்பட்டி கோட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கோட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும்வென்றான், செட்டிகுறிச்சி ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையும், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சன்னதுபுதுக்குடி, ஆகிய துணை மின் நிலைய பகுதிகளுக்கு உள்பட்ட மின்பாதை பகுதிகளில் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது என கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.