முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி, மணப்பாடில் இன்று மின்சாரம் நிறுத்தம்

கோவில்பட்டி, மெஞ்ஞானபுரம், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் அவசர கால பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கோவில்பட்டி, மெஞ்ஞானபுரம், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் அவசர கால பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவில்பட்டி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், விஜயாபுரி, எட்டயபுரம், பசுவந்தனை, செட்டிகுறிச்சி, கடம்பூா், அய்யனாா்ஊத்து ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.

திருச்செந்தூா்: உடன்குடி, சாத்தான்குளம் , ஆறுமுகனேரி, செம்ம்றிகுளம் உபமின் நிலையத்திற்குள்பட்ட மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டிணம், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 12.00 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.