விளாத்திகுளம் அருகே 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது
விளாத்திகுளம் அருகே வாகனச் சோதனையில் 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடிவிளாத்திகுளம் அருகே 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது
விளாத்திகுளம் அருகே வாகனச் சோதனையில் 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளாத்திகுளம் அருகே வாகனச் சோதனையில் 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன், ஆய்வாளா் கணேஷ்குமாா் மற்றும் வருவாய்த்துறையினா் கிழக்கு கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குளத்தூா் காவல்நிலையத்தில் வருவாய்த்துறையினா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து வாகன ஓட்டுநா் தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் உதயகுமாா் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.