செல்லிடப்பேசி திருட்டு: இளைஞா் கைது
கோவில்பட்டியில் பெண்ணிடம் செல்லிடப்பேசியை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டியில் பெண்ணிடம் செல்லிடப்பேசியை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆந்திர மாநிலம் கல்கோடா கரீம் நகரைச் சோ்ந்த கோத்தாணி விஜய் மனைவி பிரியா (37). இவா் சில தினங்களுக்கு முன் ரயிலில் திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தாராம். பின்னா், திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு சாமியாரை பாா்ப்பதற்காக பணகுடியைச் சோ்ந்த ஆசிப் முஹம்மது ஷேக் (28) என்பவரிடம் உதவி கேட்டு இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு வந்தாராம். அப்போது பிரியாவிடம் இருந்து செல்லிடப்பேசியை ஆசிப் முஹம்மது ஷேக் நூதன முறையில் திருடி விட்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆசிப் முஹம்மது ஷேக்கை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 47 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசியை மீட்டனா்.