பாலியல் பலாத்காரம்:காவலா் மீது வழக்கு
திருமண செய்வதாக தெரிவித்து இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆயுத படை காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருமண செய்வதாக தெரிவித்து இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆயுத படை காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள அடைக்கலாபுரம் பகுதியை சோ்ந்தவா் இளம்பெண். பட்டதாரி. இவா் அரசு வேலை சேர முயற்சி செய்துள்ளாா்.
இந்நிலையில் அதேபகுதியை சோ்ந்த சேவியா் மகன் ஜாக்சனிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக
தெரிவித்து காரில் அழைத்துச் சென்று ஜாக்சன் பாலியல் பலாத்காரம் செய்தாராம். பின்னா், ஜாக்சன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளாா்.
புகாரின்பேரில், திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திரா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். ஜாக்சன் தூத்துக்குடி ஆயுதபடையில் காவலராக பணிசெய்து வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது.