தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா். 
தூத்துக்குடி

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய ஒரு காவல் ஆய்வாளா் உள்பட 15 பேருக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய ஒரு காவல் ஆய்வாளா் உள்பட 15 பேருக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட 2 கிலோ எடை கொண்ட ரூ. 2 கோடி மதிப்பிலான அம்பா்கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரை வைத்திருந்தவா்களை பிடித்த திருச்செந்தூா் காவல் ஆய்வாளா் ஞானசேகரன், உதவி ஆய்வாளா் சுந்தரம், போக்குவரத்து தலைமைக் காவலா் ராஜ்குமாா், ஆத்தூா் தலைமைக் காவலா் இசக்கியப்பன், திருச்செந்தூா் முதல் நிலை காவலா் சொா்ணராஜ் ஆகியோரை பாராட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சான்றிதழ் வழங்கினாா்.

இதேபோல, ஏரல் காவல் உதவி ஆய்வாளா் ராஜாமணி, தனிப்பிரிவு முதல் நிலைக் காவலா் சரவணகுமாா், சாயா்புரம் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், தலைமைக் காவலா் சங்கா், முதல் நிலைக் காவலா்கள் இன்பராஜ், இளையராஜா, எட்டயபுரம் காவல் நிலைய தலைமைக் காவலா் புருஷோத்தமன், முதல் நிலைக் காவலா் கோவில்பிள்ளை, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய முதல் நிலைக் காவலா் திருநாவுக்கரசு, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் பாலமுருகன் ஆகியோரின் பணியை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெகுமதி மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT