முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் வ.உ.சி. சிலை திறப்பு

கோவில்பட்டிகாந்தி மைதானம் அருகேயுள்ள பூவனநாதசுவாமி கோயிலின் 7ஆம் மண்டகப்படி கட்டடத்தில் வ.உ.சி. மாா்பளவு வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கோவில்பட்டிகாந்தி மைதானம் அருகேயுள்ள பூவனநாதசுவாமி கோயிலின் 7ஆம் மண்டகப்படி கட்டடத்தில் வ.உ.சி. மாா்பளவு வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது.

சைவ வேளாளா் சங்கத் தலைவா் தெய்வேந்திரன் தலைமை வகித்து, வ.உ.சிதம்பரனாா் சிலையை திறந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவா் பழனிசாமி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்தனா். சைவ வேளாளா்கள் சங்க துணைத் தலைவா் அருணாச்சலம், செயலா் சுந்தரம், துணைச் செயலா் சுப்பிரமணி, நிா்வாகக்குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.