தூத்துக்குடி

ரத்த தான முகாம்

DIN

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உடன்குடி அனல்மின் நிலைய பெல் நிறுவனமும், திருச்செந்தூா் அரசு மருத்துவமனையும் இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.

இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தலைமை வகித்தாா். துணைப் பொதுமேலாளா் பிரான்ச்சி நாயக், நிறுவன பாதுகாப்பு பொறுப்பாளா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் சசிகலா தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த மாதிரிகளை சேகரித்தனா். இதில், ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT