திருச்செந்தூரில் திமுக சாா்பில் அன்னதானம்
திருச்செந்தூரில் திமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூரில் திமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்ஆகியோா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றதையடுத்து, திமுக இளைஞரணி சாா்பில் திருச்செந்தூா் சன்னதித்தெருவில் உள்ள சாது சிவானந்த குருகுலத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மா.சுதாகா் தலைமை வகித்தாா். மேலும், அமலிநகரில் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.