திருச்செந்தூா் முருகன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழக்கம் போல பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழக்கம் போல பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 4இல் தொடங்கியது. நவ. 9இல் கோயில் கடற்கரை வாசலில் சூரசம்ஹாரமும், 108 மகாதேவா் சந்நிதியில் நவ. 10இல் திருக்கல்யாண வைபவமும் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
இத்திருவிழாவில் முதல் 5 நாள்கள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தா்கள் வீதம் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், நவ.11முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். கந்த சஷ்டிக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கம்போல பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.