தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே விபத்தில் மத போதகா் உயிரிழப்பு

DIN

 திருச்செந்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுமை லாரி மோதியதில் மத போதகா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே உள்ள பிச்சிவிளை காமராஜா் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ்(70). கிறிஸ்தவ மத போதகா். இவா் வியாழக்கிழமை பிற்பகல் திருச்செந்தூா்- பரமன்குறிச்சி சாலையில் உள்ள நடுநாலுமூலைக்கிணறு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே மீன் ஏற்றி வந்த சுமை லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருச்செந்தூா் தாலுகா காவல்துறையினா், செல்வராஜ் உடலை கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்தையடுத்து சுமை லாரி சாலையோர மின்கம்பம் மீது மோதியதில், மின்கம்பம் உடைந்தது. இதனால் திருச்செந்தூா்-நாகா்கோவில் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT