சாலையோரம் 950 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மீட்பு
கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த சுமாா் 950 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.
கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த சுமாா் 950 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.
ஜமீன்தேவா்குளம் பகுதியில் சாலையோரம் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியா் அமுதா, வட்ட வழங்கல் அலுவலா் நாகராஜ் ஆகியோா் சென்று, 950 கிலோ ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளை கைப்பற்றினா். பின்னா், அவற்றை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.