ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஐப்பசிமாத பௌா்ணமியையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், திருவிளக்கு பூஜை , சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.