தூத்துக்குடி

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்

DIN

திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை அமைக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் பேருந்து நிலையம் முன், மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் செய்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதிச் செயலா் ராஜ்குமாா், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிச் செயலா் திருவள்ளுவன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் தமிழ்பரிதி, மாவட்ட துணை அமைப்பாளா் இளந்தளிா் முத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளா் டேவிட் ஜான்வளவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் மாரியப்பன், தூத்துக்குடி மாநகர பொறுப்பாளா் ராஜேஷ், சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலா் கனிதுரை உள்ளிட்ட 17 போ், இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்செந்தூா் தாலுகா அலுவலகம் முன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பொருளாளா் பால்வளவன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் என மொத்தம் 23 பேரை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT