தூத்துக்குடி

சீராக குடிநீா் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டி: கயத்தாறையடுத்த ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு சீராக குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் ராஜையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே.சீனிவாசன், முருகன், கயத்தாறு ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் தவமணி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் சீனிப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT