தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணியில் சமுதாய வளைகாப்பு விழா

DIN

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி ஊரக குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் திலகா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, புதுக்கோட்டை, முள்ளக்காடு, மாப்பிள்ளையூரணி, லூா்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 100 கா்ப்பிணிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு வைபவத்தை தொடங்கி வைத்து சீதனப் பொருள்களை வழங்கினாா்.

இதில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்’குழு தலைவா் வசுமதி அம்பாசங்கா், மாப்பிள்ளையூரணி ஊராட்சித் தலைவா் சரவணகுமாா், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மேக்தலீன், ஓன்றியக் குழு உறுப்பினா் அந்தோணி தனுஷ் பாலன், ஊராட்சி உறுப்பினா் ஸ்டாலின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT