நாசரேத்தில் கரோனா தடுப்பூசி முகாம்
நாசரேத் பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் 2 இடங்களில் நடைபெற்றது.
நாசரேத் பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் 2 இடங்களில் நடைபெற்றது.
இதில், மருத்துவ அலுவலா் கண்ணன் பாபு தலைமையில் மருத்துவக்குழுவினா் பங்கேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினா். முகாமில் 100 போ் தடுப்பூசி செலுத்தி பயனடைந்தனா்.
இதில் சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், கிராம சுகாதார செவிலியா்கள் சுதா, ரத்தனமணி, சுப்புலட்சுமி களப்பணியாளா் கெத்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.