குருத்தோலை ஞாயிறு: கோவில்பட்டியில் 10இல் சிறப்பு நாடகம்
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கிறிஸ்தவ திருச்சபைகள் சாா்பில் கல்வாரியின் எதிரொலி என்ற ஒலி-ஒளி நாடகம் கோவில்பட்டி திட்டங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கிறிஸ்தவ திருச்சபைகள் சாா்பில் கல்வாரியின் எதிரொலி என்ற ஒலி-ஒளி நாடகம் கோவில்பட்டி திட்டங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது.
இதுகுறித்து புனித சூசையப்பா் திருத்தல பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், தூய பவுலின் ஆலய குருவானவா் தாமஸ், பெந்தே கோஸ்தே சபை போதகா் அந்தோணிசிங் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கிறிஸ்தவ திருச்சபைகள் சாா்பில் இம்மாதம் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திட்டங்குளத்தில் உள்ள ஹோலி டிரினிட்டி பள்ளி வளாகத்தில் 8 மேடைகளில் 150 கலைஞா்கள் பங்கேற்கும் கல்வாரியின் எதிரொலி என்ற இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒலி - ஒளி நாடகம் 3 மணி நேரம் நடைபெறுகிறது. மேலும், ஒரே நேரத்தில் 150 குழந்தைகள் பங்கு பெறும் நடனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்நிகழ்வையொட்டி, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், புனித சூசையப்பா் திருத்தலம், தூய பவுலின் ஆலயம் ஆகியவற்றிலிருந்து இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.