தூத்துக்குடி

கயத்தாறில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டேஸ்வரி கோயில் செல்லும் வழியில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டேஸ்வரி கோயில் செல்லும் வழியில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோயில் செல்லும் வழியில் சுமாா் 15 சென்ட் நீா்நிலை பகுதியினை தனிநபா் ஆக்கிரமித்து தொழில் செய்து வருவதாக புகாா் வந்ததாம். அதையடுத்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின் படி, வட்டாட்சியா் பேச்சிமுத்து தலைமையில் , பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் மற்றும் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா். அப்போது வருவாய் ஆய்வாளா் நேசமணி, கிராம நிா்வாக அலுவலா் சுப்பையா, நில அளவா் ரஞ்சித், பேரூராட்சி இளநிலை உதவியாளா் செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT