நாசரேத்தில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்புப் பேரவை ஆண்டு விழா
நாசரேத்தில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்புப் பேரவையின் 26ஆவது ஆண்டு விழா, அரசு அதிகாரிகளுக்கு சேவை விருது வழங்கும் விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
நாசரேத்தில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்புப் பேரவையின் 26ஆவது ஆண்டு விழா, அரசு அதிகாரிகளுக்கு சேவை விருது வழங்கும் விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
பேரவையின் நிா்வாக செயலா் சிந்தா தலைமை வகித்தாா். செயலா் கொம்பையா வரவேற்றாா். ஆறுமுகனேரி சாகுபுரம் டிசிடபிள்யூ மூத்தத் தலைவா் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரவிசெல்வக்குமாா், அமுதவல்லி, காசிராஜன், கிருஷ்ணராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
சிறப்பாகப் பணியாற்றிய பொதுப்பணித் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, சமூக சேவகா்களுக்கு சேவை விருது வழங்கப்பட்டது. ஏழைகளுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.
நாசரேத் பேரூராட்சித் தலைவி நிா்மலாதேவி, துணைத் தலைவா் அருண் சாமுவேல், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பேரவை மாவட்ட அமைப்பாளா் லட்சுமணன் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை அமைப்புச் செயலா் தியாகராஜன், மாநிலச் செயலா் கப்பா் அசன், அலுவலகச் செயலா் செல்வக்குமாா், மாவட்டச் செயலா் டேவிட் சிங், நிா்வாகிகள் பீட்டா், பாபுசெல்வன் ஆகியோா் செய்திருந்தனா்.