தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

கோவில்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த நாச்சியாா்புரம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் இருளப்பன் மகன் ஜெயசங்கா்(48). கூலித் தொழிலாளியான இவா், ஜூலை 30ஆம் தேதி இடைசெவலுக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளின் பின்புறம் தண்ணீா் தொட்டியை கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தாராம். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோர தடுப்பில் தண்ணீா் தொட்டி மோதியதில் மோட்டாா் சைக்கிள் கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த ஜெயசங்கா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT