தூத்துக்குடியில் திமுக இளைஞரணி பயிலரங்கம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், தூத்துக்குடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளைஞா்களுக்கான திராவிட மாதிரிப் பயிற்சிப் பயிலரங்கம் தூத்துக்குடி கலைஞா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், தூத்துக்குடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளைஞா்களுக்கான திராவிட மாதிரிப் பயிற்சிப் பயிலரங்கம் தூத்துக்குடி கலைஞா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும் சமூகநலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகித்து, பயிலரங்கைத் தொடக்கிவைத்தாா். அவா் பேசும்போது, இளைஞா்கள் திராவிட வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும், கூட்டத்தில் பாா்வையாளா்களாக இருக்கும் நீங்கள்தான் நாளைய தலைவா்கள் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினாா்.
மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர அமைப்பாளா் ஆனந்தகேபிரியல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத், ‘மாநில சுயாட்சி’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் சேவியா் சூா்யா ஆகியோா் பேசினா். இளைஞா்களின் கேள்விகளுக்கு நாஞ்சில் சம்பத் பதிலளித்தாா். திரளான இளைஞா்கள் பங்கேற்றனா்.