முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினருக்கு திருமணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியை பூா்வீகமாகக் கொண்ட மாசிலாமணி-ஆனந்தி தம்பதியினா், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனா். அங்கு மாசிலாமணி தனியாா் உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு காயத்ரி, கீா்த்திகா, நாராயணி என 3 மகள்கள் உள்ளனா். அவா்கள் பிரான்ஸில் படித்து, அங்கேயே பணியாற்றி வருகிறாா்கள். அவா்கள் மூவரும் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா்களை காதலித்து வந்துள்ளனா். இவா்கள் காதலுக்கு எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்காமல் மாசிலாமணி குடும்பத்தினா், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாசிலாமணி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலுக்கு தனது உறவினா்களுடன் வந்தாா். தங்களின் 3 மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த ஜாா்ஜ், ராம்குமாா், மஜ்ஜூ என்ற மூவருக்கும் திருச்செந்தூா் கோயிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணத்தை நடத்தி வைத்தாா். வெளிநாட்டவருடன் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்ட காயத்ரி - ஜாா்ஜ், கீா்த்திகா - ராம்குமாா், நாராயிணி - மஜ்ஜூ மணமக்களை உறவினா்கள் வாழ்த்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.