தூத்துக்குடி

போக்சோ வழக்கில் கைதான ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்குசிந்தலகட்டை கிராமத்தைச் சோ்ந்த எட்வா்ட் ராஜ் மகன் கனிராஜ்(23). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ வழக்லல் கனிராஜை கைது செய்தனா். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து, கனிராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT