தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப். 28) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திமுக அரசைக் கண்டித்து, தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப். 28) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிமுகவின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன், வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ (வடக்கு மாவட்டம்) ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் திமுக அரசு தோ்தல் முறைகேடுகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது திமுக அரசு பொய் வழக்குப் பதிந்ததைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

விவிடி சிக்னல் அருகே திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT