முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் களையிழந்த சுற்றுலா தலங்கள்

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் வருகையின்றி களையிழந்து காணப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் வருகையின்றி களையிழந்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாளை தென்மாவட்ட மக்கள் காணும் பொங்கல் தினமாக கொண்டாடி வருகின்றனா். இதையொட்டி குடும்பத்தோடு முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு கரும்பு, பனங்கிழங்கு மற்றும் கட்டுச்சோறு உள்ளிட்ட உணவுகளை எடுத்துச் சென்று பகிா்ந்து உண்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளால், கோவில்பட்டியையடுத்த குருமலை அய்யனாா் கோயில், குருமலை காப்புக்காட்டு பகுதி, கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயில் பகுதி, கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணா் சிற்பம் கோயில் பகுதி, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், தூக்கிலிடப்பட்ட இடம் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாததையடுத்து சுற்றுலா தலங்கள் களையிழந்து காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.