முகப்பு
தூத்துக்குடி

திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் முடுக்குமீண்டான்பட்டியில் திருவள்ளுவரின் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் முடுக்குமீண்டான்பட்டியில் திருவள்ளுவரின் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் அதன் அலுவலகத்தில் மன்ற துணைத் தலைவா் முத்துசாமி தலைமையில் மன்ற செயலா் நம்.சீனிவாசன் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினா்கள் பிரபு, கண்ணன், சங்கா், ராஜவிக்னேஷ் பள்ளி தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, முடுக்குமீண்டான்பட்டி எஸ்.டி.ஏ.சா்ச் தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலா் கலைச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஊா் நாட்டாண்மை லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.