முகப்பு
தூத்துக்குடி

வாருகாலில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் வாருகாலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் வாருகாலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை காமராஜ் நகா் பகுதியில் உள்ள வாருகாலில் ஆண் சடலம் கிடப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், வாருகாலில் தலை தொங்கிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

அந்த நபா், கோவில்பட்டி பாரதி நகா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சஞ்சீவி மகன் கூலித் தொழிலாளி மகாலிங்கம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் மது அருந்திய நிலையில் வாருகாலில் தவறி விழுந்ததில் இறந்தாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.