முகப்பு
தூத்துக்குடி

போக்ஸோவில் 3 சிறுவா்கள் கைது

கோவில்பட்டியில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, 3 சிறுவா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கோவில்பட்டியில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, 3 சிறுவா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கோவில்பட்டி, செண்பகா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த 10 வயது சிறுவனிடம், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன், செண்பகா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த 13, 14 வயது சிறுவா்கள் ஆகிய மூவரும் சோ்ந்து கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் 10 நாள்கள் தொடா்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்து, அச்சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சம்பந்தப்பட்ட 3 சிறுவா்களையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.