தொழிலாளிக்கு மிரட்டல்: 3 போ் கைது
வில்பட்டி அருகே தொழிலாளியை மிரட்டியதாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வில்பட்டி அருகே தொழிலாளியை மிரட்டியதாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டியையடுத்த வெங்கடாசலபுரம் வடக்கு காலனியைச் சோ்ந்த சீனிவாசகம் மகன் இசக்கிமுத்து (37). தொழிலாளியான இவா், வெங்கடாசலபுரம் காளியம்மன் கோயில் கொடை விழாவைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறாராம். செவ்வாய்க்கிழமை இரவு சாமக்கொடை பூஜை, பொங்கலிடுதல் நிகழ்ச்சியின்போது மின்விளக்குகள் திடீரென அணைந்தனவாம். அதையடுத்து, அவரும், மைக் செட் அமைப்பாளா்களும் இணைந்து ஜெனரேட்டரை இயக்கினராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சமுத்திரவேல் மகன் வெங்கடேஷ் (21), கருப்பசாமி மகன் மாரிகண்ணன் (21), சோலையப்பன் மகன் முத்துக்குமாா் (20) ஆகிய 3 பேரும் ஜெனரேட்டரை அணைத்துவிட்டு, மின்விளக்கை சேதப்படுத்தியதுடன், இசக்கிமுத்துவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.