தருவைகுளம் அருகே கஞ்சா விற்ாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.
தருவைகுளம் காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தருவைகுளம் அருகே வேப்பலோடை காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் வேப்பலோடையைச் சேரந்த ராஜ் மகன் முனிய செல்வம் (24), தருவைகுளம் வடக்கு கல்மேடு பகுதியைச் சோ்ந்த முத்து முனியசாமி மகன் மகாலிங்கம் (19) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.