முதலூா், படுக்கப்பத்தில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழக முதல்வா் மு,க, ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, முதலூா், படுக்கப்பத்தில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு,க, ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, முதலூா், படுக்கப்பத்தில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான விழாவுக்கு தெற்கு ஒன்றிய செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழக மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்து கொன்டு, முதலூரில் 400 பேருக்கு வேட்டி, சேலைகளும், படுக்கப்பத்தில் தூய்மைப் பணியாளா்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு இலவச அரிசியும், 300 பேருக்கு சுவா் கடிகாரமும் வழங்கினாா்.
இதில் மாநில மாணவா் அணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞா் அணி செயலா் ராமஜெயம், மாநில பொதுக்குழு உறுப்பினா் பசுபதி, சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜோசப், சாத்தான்குளம் நகர செயலா் மகா. இளங்கோ, ஒன்றிய கவுன்சிலா் மீனா முருகேசன், ஒன்றிய துணைச் செயலா்கள் ஜெயராமன், சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.