முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம் அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், விஜயனூா் காட்டுப்பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அதில், 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து, அதைக் கைப்பற்றி மாவட்ட உணவுப் பாதுகாப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அந்தப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்ததில் திசையன்விளை உள்ளிட்ட பகுதிக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →