முகப்பு
தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி தேசிய பசுமைப் படை சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி தேசிய பசுமைப் படை சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் மாணிக்கம் தலைமை வகித்து, மரக்கன்று நட்டாா். பள்ளி ஆசிரியா்கள் ராஜா (விலங்கியல்), சேவியா் (ஆங்கிலம்), சோப்பாா் (கணிதம்), சத்தியசீலன் (மரவேலை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய மகளிா் தினம், மரக்கன்று நடுவதன் பயன்கள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தேசிய பசுமைப் படைப் பொறுப்பாசிரியா் லயன் டேனியல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை தேசிய பசுமைப் படை மாணவா்கள், பொறுப்பாசிரியா் லயன் டேனியல் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →