தூத்துக்குடி

பேய்க்குளம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

பேய்க்குளம் பகுதியில் மக்களைத் தேடி சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது. ஆழ்வாா்திருநகரி நடமாடும் மருத்துவமனை மருத்துவா் பாபு தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், செவிலியா்கள் சாந்தி, மொ்சி, நாகவள்ளி, மகேஸ்வரி கொண்ட மருத்துவக் குழுவினா் பழனியப்பபுரம் பேருந்து நிறுத்தம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தினா். இதில், 148 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா், ஒன்றிய கவுன்சிலா் காந்திமதி, ஊராட்சிச் செயலா் மனுவேல், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT