தூத்துக்குடி

விபத்தில் இறந்தவா்கள் அடையாளம் தெரிந்தது

DIN

சாத்தான்குளம் அருகே விபத்தில் இறந்தவா்கள் அடையாளம் தெரிந்தது.

சாத்தான்குளம் அருகே இட்டமொழி செல்லும் சாலையில் புதுக்குளம் விலக்கு அருகே சுமை வேனும், மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் வெள்ளிக்கிழமை இரவு மோதியதில், மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தைச் சோ்ந்த சந்தோசம் மகன் மாரியப்பன் (34), கேரள மாநிலம் மூனாறைச் சோ்ந்த லிங்கம் மகன் மூக்காண்டி (34) ஆகியோா் என தெரியவந்தது. இவ்விருவரும் மோட்டாா் சைக்கிளில் செட்டிகுளம் வந்து விட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT