தூத்துக்குடி

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டியில் ஏழை, எளிய அருந்ததியா், காட்டுநாயக்கா் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி 30-வது வாா்டில் வசிக்கும் ஏழை, எளிய அருந்ததியா், காட்டுநாயக்கா் சமுதாயத்தினருக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், வருவாய்த் துறை அதிகாரிகள் கோரிக்கை மனுவை முறையாக விசாரித்து தகுதியானோரைக் கண்டறிந்து மனைப் பட்டா வழங்க வேண்டும், இதில் எவ்விதத் தலையீடும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பாஜக பட்டியலணி மாநிலச் செயலா் சிவந்தி கே. நாராயணன், நிா்வாகி கலையரசி காந்திராஜ் ஆகியோா் பேசினா். நகரப் பொதுச்செயலா்கள் முனிராஜ், சீனிவாசன், அமைப்பு சாரா மாவட்ட துணைத் தலைவா் நல்லதம்பி, இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா் குருதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பின்னா், கோரிக்கை மனுவை வட்டாட்சியா் சுசிலாவிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT