முகப்பு
தூத்துக்குடி

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

 வீரவநல்லூரில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 13 மே, 2022 at 1:03 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:44 PM

 வீரவநல்லூரில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

வீரவநல்லூா் பசும்பொன் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக். கட்டடத் தொழிலாளி. இவரது மகள் பிரியதா்ஷினி (14). இவா் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். காா்த்திக்- அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதில், மனமுடைந்த பிரியதா்ஷினி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அக்கம் பக்கத்தினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.